Posts

Showing posts from 2012
                      கண்தானம் பெற்றெடுத்த அன்னையும் கற்றுத்தந்த தந்தையும் காதல் சொல்லும் தோழியும் ஊற்றெடுக்கும் அருவியும் பொங்கிடும் கங்கையும் காலை சூரியனும் நிலவு வெளிச்சமும் அந்தி மழையும் பனித் துளியும் பரந்திருக்கும் பூமியும் பார்க்க முடியாமல் செய்துவிட்டான் - என் கண்ணின் மணியில் - கடவுள் குற்றம் இழைத்துவிட்டான்...! மண்ணில் சிறந்த - மாமனிதனையும் படைத்துவிட்டான் கண்ணைத் தானம் தரும் - கலையை அவனுக்கு வித்திட்டான்! மாமனிதன் ஒருவன் - கண்தானம் செய்ததால் என்வானம் திறந்திருச்சி இன்று! பொன்போன்ற கண்ணைப் படைத்த ஆண்டவனுக்கு - நன்றி சொல்வோம்! கண்ணைத் தானம் கொடுத்த - மாமனிதனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க - இறைவனிடம் வேண்டிச் செல்வோம்...!                                              - ஜெ.ராஜ்குமார்