Posts

                      கண்தானம் பெற்றெடுத்த அன்னையும் கற்றுத்தந்த தந்தையும் காதல் சொல்லும் தோழியும் ஊற்றெடுக்கும் அருவியும் பொங்கிடும் கங்கையும் காலை சூரியனும் நிலவு வெளிச்சமும் அந்தி மழையும் பனித் துளியும் பரந்திருக்கும் பூமியும் பார்க்க முடியாமல் செய்துவிட்டான் - என் கண்ணின் மணியில் - கடவுள் குற்றம் இழைத்துவிட்டான்...! மண்ணில் சிறந்த - மாமனிதனையும் படைத்துவிட்டான் கண்ணைத் தானம் தரும் - கலையை அவனுக்கு வித்திட்டான்! மாமனிதன் ஒருவன் - கண்தானம் செய்ததால் என்வானம் திறந்திருச்சி இன்று! பொன்போன்ற கண்ணைப் படைத்த ஆண்டவனுக்கு - நன்றி சொல்வோம்! கண்ணைத் தானம் கொடுத்த - மாமனிதனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்க - இறைவனிடம் வேண்டிச் செல்வோம்...!                                              - ஜெ.ராஜ்குமார்

என் இரண்டாம் கவிதை புத்தகம்...!

மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்! - இந்த நூலின் தலைப்பு! உங்கள் மனதைத் திறக்கப் போகும் , என் இரண்டாம் கவிதைப் புத்தகம் அச்சாகிவிட்டது. வரும் ஜனவரி 14ஆம் தேதி 2012ல்,சென்னை புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரம் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளிவர உள்ளது. அனைவரும் வாருங்கள், வந்து விழாவை சிறப்பியுங்கள். சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டும் , மனிதனின் மனதின் ஒத்த செயல்களைச் சுட்டி காட்டவும் , இந்த புத்தகம் உயிர் பெற்றுள்ளது. உள்ளத்தால் படியுங்கள்! உண்மையாய் உலா வாருங்கள்!!! உங்கள் உள்ளத்தைத் தூய்மை படுத்துங்கள்!!! வாழ்க தமிழ்! வளர்க பாரதம்!! அன்புடன் ஜெ.ராஜ்குமார் 9442457706

அவளிடம்

தென்றல் அவள் பக்கம் சாய்ந்து கேட்கிறது உன் வெட்கம் கொஞ்சம் கடன் தா என்று ! மின்னல் அவள் மனதை தொட்டு கேட்கிறது எப்படி மனதை படம்பிடிப்பதென்று ! நிலவு அவள் முகம்பார்த்து கேட்கிறது எப்படி முழுநிலவாய் முழுநேரம் இருப்பதென்று ! சூரியன் அவள் சுகம் பார்த்து கேட்கிறது கோபத்திலும் எப்படி அழகாய் தோன்றுவதென்று ! வீசுகின்ற பெருங்காற்று பாய்ந்து வருகிற அலைகள் ஓயாமல் பெய்யும் அடை மழை பொங்கிவரும் தீக்குமிழி பாரம் தாங்காமல் அதிரும் பூமிதாய் சுட்டெரிக்கும் வெயில் மனிதனின் ஆசை - இவையெல்லாம் அவளிடம் கேட்கிறது பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்று !

பயணம்-சந்தோஷம்

பணிச்சாரலில் நனைகிறேன் - உன் மெல்லிய விரல்கள் என்னை தழுவுவதாய் நினைக்கிறேன் ! குலிரெடுத்து நடுங்குகிறேன் -நீ என்னை குளுக்குவதுபோல் உணர்கிறேன் பச்சைபசுமை எங்கெங்கும் - அதுபோல் நீ என்னில் இருக்கிறாய் என்றென்றும் ! கொட்டுகின்ற அருவியை பார்த்தால் - உன்னில் ஊற்றெடுக்கும் அன்பை நான் பார்க்கிறேன் ! நெடுந்தூரம் பயணங்கள் மேற்கொண்டேன் - நீ என்னில் இருப்பதாய் எண்ணி ! சுற்றி பார்த்த இடமெல்லாம் சந்தோஷம் -ஏனெனில் அதில் உன் முகம் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் ! கடவுளிடம் வேண்டினேன் - இதை விட சந்தோஷம் வேறு இல்லை என்று !

அறுபது வயது குழந்தை

அறுபது வயது கிழம்போல் இருப்பாய் ஆகாயத்தை தொட்டுவிட நினைப்பாய் அல்வா துண்டை பார்த்தால் நாவில்-எச்சை ஊருமடா சக்கரை நோய் இருப்பதை எண்ணி நாவும்-உள்ளே போய்விடுமடா ! பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தால் - பழய குரும்பை செய்ய தோனுமடா ! தடியடி வைத்து நடந்தாலும் தாடி நிறைய வந்தாலும் முடிக்கு டை அடிப்பதை மறப்பதில்லை ! முகத்துக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பதில்லை ! சிலைபோல் வீட்டில் இருந்தாலும் மலைபோல் சாப்பிடுவதை மறந்ததில்லை பேச்சுக்கள் குறைந்துவிட்டதுதான் - ஆனால் எண்ணங்கள் குறையவில்லையே ! முதுமையும் அடைந்துவிட்டதுதான் - அனால் இளமையின் துடிப்பும் இருக்கிறதே இன்னும் ! கிரிகெட் விளையாட தோனுகிறது கூடைபந்து விளையாட தோனுகிறது கால்பந்தை உதைக்க தோனுகிறது பம்பரத்தை சுத்த தோனுகிறது கோலியை அடிக்க தோனுகிறது கில்லியில் இறங்க தோனுகிறது கபடியில் கலம்கொள்ள தோனுகிறது காத்தாடி விட ஆசைவருகிறது தண்டவாலத்தில் நடக்க தோனுகிறது ! தண்ணீரில் நீச்சல் அடிக்க தோனுகிறது தரையில் மனலோடு விளையாட தோனுகிறது ! பட்டாம்பூச்சியின் வண்ணங்களை - கையில் ஏந்த தோனுகிறது...! பார்க்குமிடமெல்லாம் கால்கள் - நடமாட தோனுகிறது புதியபாதை போட உள்ளம் தேடுகிற

வாழ்க்கை பயணம்

கருவறையிலிருந்து கல்லறைக்கு போகும் வழியில் வாழ்ந்து விட்டு போகும் வாழ்க்கை...!

முழுமையான பெண் நீ!

இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! ஒவ்வொரு கவிதைக்கு ஏற்றாற்போல் படங்கள் அமைத்துள்ளேன். பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. order By: connectraj25@gmail.com Cell: +91 9019049437