கண்தானம்

பெற்றெடுத்த அன்னையும்
கற்றுத்தந்த தந்தையும்
காதல் சொல்லும் தோழியும்
ஊற்றெடுக்கும் அருவியும்
பொங்கிடும் கங்கையும்
காலை சூரியனும்
நிலவு வெளிச்சமும்
அந்தி மழையும்
பனித் துளியும்
பரந்திருக்கும் பூமியும்
பார்க்க முடியாமல்
செய்துவிட்டான் - என்
கண்ணின் மணியில் - கடவுள்
குற்றம் இழைத்துவிட்டான்...!

மண்ணில் சிறந்த -
மாமனிதனையும் படைத்துவிட்டான்
கண்ணைத் தானம் தரும் -
கலையை அவனுக்கு வித்திட்டான்!
மாமனிதன் ஒருவன் -
கண்தானம் செய்ததால்
என்வானம் திறந்திருச்சி இன்று!
பொன்போன்ற கண்ணைப்
படைத்த ஆண்டவனுக்கு -
நன்றி சொல்வோம்!
கண்ணைத் தானம் கொடுத்த - மாமனிதனுக்கு
சொர்க்கத்தில் இடம் கிடைக்க - இறைவனிடம்
வேண்டிச் செல்வோம்...!
                                             - ஜெ.ராஜ்குமார்

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்