Posts

Showing posts from May, 2010

அவளிடம்

தென்றல் அவள் பக்கம் சாய்ந்து கேட்கிறது உன் வெட்கம் கொஞ்சம் கடன் தா என்று ! மின்னல் அவள் மனதை தொட்டு கேட்கிறது எப்படி மனதை படம்பிடிப்பதென்று ! நிலவு அவள் முகம்பார்த்து கேட்கிறது எப்படி முழுநிலவாய் முழுநேரம் இருப்பதென்று ! சூரியன் அவள் சுகம் பார்த்து கேட்கிறது கோபத்திலும் எப்படி அழகாய் தோன்றுவதென்று ! வீசுகின்ற பெருங்காற்று பாய்ந்து வருகிற அலைகள் ஓயாமல் பெய்யும் அடை மழை பொங்கிவரும் தீக்குமிழி பாரம் தாங்காமல் அதிரும் பூமிதாய் சுட்டெரிக்கும் வெயில் மனிதனின் ஆசை - இவையெல்லாம் அவளிடம் கேட்கிறது பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்று !

பயணம்-சந்தோஷம்

பணிச்சாரலில் நனைகிறேன் - உன் மெல்லிய விரல்கள் என்னை தழுவுவதாய் நினைக்கிறேன் ! குலிரெடுத்து நடுங்குகிறேன் -நீ என்னை குளுக்குவதுபோல் உணர்கிறேன் பச்சைபசுமை எங்கெங்கும் - அதுபோல் நீ என்னில் இருக்கிறாய் என்றென்றும் ! கொட்டுகின்ற அருவியை பார்த்தால் - உன்னில் ஊற்றெடுக்கும் அன்பை நான் பார்க்கிறேன் ! நெடுந்தூரம் பயணங்கள் மேற்கொண்டேன் - நீ என்னில் இருப்பதாய் எண்ணி ! சுற்றி பார்த்த இடமெல்லாம் சந்தோஷம் -ஏனெனில் அதில் உன் முகம் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் ! கடவுளிடம் வேண்டினேன் - இதை விட சந்தோஷம் வேறு இல்லை என்று !

அறுபது வயது குழந்தை

அறுபது வயது கிழம்போல் இருப்பாய் ஆகாயத்தை தொட்டுவிட நினைப்பாய் அல்வா துண்டை பார்த்தால் நாவில்-எச்சை ஊருமடா சக்கரை நோய் இருப்பதை எண்ணி நாவும்-உள்ளே போய்விடுமடா ! பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தால் - பழய குரும்பை செய்ய தோனுமடா ! தடியடி வைத்து நடந்தாலும் தாடி நிறைய வந்தாலும் முடிக்கு டை அடிப்பதை மறப்பதில்லை ! முகத்துக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பதில்லை ! சிலைபோல் வீட்டில் இருந்தாலும் மலைபோல் சாப்பிடுவதை மறந்ததில்லை பேச்சுக்கள் குறைந்துவிட்டதுதான் - ஆனால் எண்ணங்கள் குறையவில்லையே ! முதுமையும் அடைந்துவிட்டதுதான் - அனால் இளமையின் துடிப்பும் இருக்கிறதே இன்னும் ! கிரிகெட் விளையாட தோனுகிறது கூடைபந்து விளையாட தோனுகிறது கால்பந்தை உதைக்க தோனுகிறது பம்பரத்தை சுத்த தோனுகிறது கோலியை அடிக்க தோனுகிறது கில்லியில் இறங்க தோனுகிறது கபடியில் கலம்கொள்ள தோனுகிறது காத்தாடி விட ஆசைவருகிறது தண்டவாலத்தில் நடக்க தோனுகிறது ! தண்ணீரில் நீச்சல் அடிக்க தோனுகிறது தரையில் மனலோடு விளையாட தோனுகிறது ! பட்டாம்பூச்சியின் வண்ணங்களை - கையில் ஏந்த தோனுகிறது...! பார்க்குமிடமெல்லாம் கால்கள் - நடமாட தோனுகிறது புதியபாதை போட உள்ளம் தேடுகிற

வாழ்க்கை பயணம்

கருவறையிலிருந்து கல்லறைக்கு போகும் வழியில் வாழ்ந்து விட்டு போகும் வாழ்க்கை...!