அவளிடம்
தென்றல் அவள் பக்கம் சாய்ந்து கேட்கிறது உன் வெட்கம் கொஞ்சம் கடன் தா என்று ! மின்னல் அவள் மனதை தொட்டு கேட்கிறது எப்படி மனதை படம்பிடிப்பதென்று ! நிலவு அவள் முகம்பார்த்து கேட்கிறது எப்படி முழுநிலவாய் முழுநேரம் இருப்பதென்று ! சூரியன் அவள் சுகம் பார்த்து கேட்கிறது கோபத்திலும் எப்படி அழகாய் தோன்றுவதென்று ! வீசுகின்ற பெருங்காற்று பாய்ந்து வருகிற அலைகள் ஓயாமல் பெய்யும் அடை மழை பொங்கிவரும் தீக்குமிழி பாரம் தாங்காமல் அதிரும் பூமிதாய் சுட்டெரிக்கும் வெயில் மனிதனின் ஆசை - இவையெல்லாம் அவளிடம் கேட்கிறது பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்று !