Posts

Showing posts from January, 2010

முழுமையான பெண் நீ!

இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! ஒவ்வொரு கவிதைக்கு ஏற்றாற்போல் படங்கள் அமைத்துள்ளேன். பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. order By: connectraj25@gmail.com Cell: +91 9019049437

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன் பெண்ணே - உன்னை கண்ட முதல் நாளே ! கண்கள் உனைதேடி அலையும் அதுதானே கனவுலகின் காதலியே நினைவுலகில் வருவதெப்போ ! பிரியமுடன் வருவாயா பிரிய முத்தம் தருவாயா ! மழை பொழியுது மனம் வீசுது மலர்களெல்லாம் பூக்கிறது பூக்கிறது உன் வருகைக்காக காத்து கிடக்கிறது ! தினந்தோறும் மனம் தேடும் என் காதலி நீ தானே ! என் இதயம் துடிப்பது - உன் நினைவின் அலைவரிசையிலே...! உன்னோடு வாழ்ந்து நீ பெற்ற இன்பம் நான் பெற வேண்டும் என்னோடு வாழ்ந்து நீ வேண்டிய வாழ்க்கை நான் தர வேண்டும் ! கண்களுக்குள் நீதானே... கடைசிவரை காப்பேனே...! கண்மணியே நீ வர காத்திருக்கு மனம் - என் வாசல் திறந்திருக்கு தினம் !

வானம்

தொடமுடியா தூரத்தில் நீ தொட்டுவிடும் தூரத்தில் கண்களுக்கு இணையில்லா மேக கூட்டம் உன்னிடம் - மழையெல்லாம் தந்திடுவாய் இந்த பூமியிடம் பாதுகாப்பு கவசம் நீ - இந்த பூமிக்கு கிடைத்த நீலகண்ணன் நீ பகலெல்லாம் தாங்கிடுவாய் சூரியனை இரவெல்லாம் ஜொலித்துடுவாய் நிலவோடு ஏழு வண்ண வானவில்லை கொண்டவன் நீ எண்ணிக்கையில்லா நட்சத்திரங்களுக்கு சொந்தம் நீ கண்சிமுட்டுவாய் மின்னல் என்று சத்தம் போடுவாய் இடி என்று மழை கொட்டுவாய் கருணை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - முயற்சி எதுவரை என்றால் - வானம் வரை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - வெற்றி எதுவரை என்றால் - வானம் வரை என்று நம்பிக்கை ஊட்டுவாய் ! - வாழ்க்கை எதுவரை என்றால் - வானம் வரை என்று !

கனவு

தூங்கி எழ நினைத்தாலும் - எனை தூக்கத்தில் ஆழ்த்தும் என் கற்பனை திறனை அதிகரிக்கும் - நான் அறியாமலேயே ! கண்ணை மூட கற்றுகொண்ட நான் கனவை அடக்க கற்றுகொள்ளவில்லை - அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் - என் கற்பனை திறனை வளர்க்கிறதே ! முந்தி அடித்து முகம் சோர்ந்து அவசர உலகத்தில் அலைந்து திரிந்து வந்து படுத்தால் - உங்கள் கண்களுக்கு விருந்தாகவும் - உங்கள் கற்பனைக்கு மருந்தாகவும் - கனவுகள் தினம் காட்சியளிக்கும்...! எட்ட முடியா வாழ்க்கையை கூட தொட்டுவிட முடியும் கனவால் விட்டுபோன உறவைகூட ஒட்டி பார்க்க முடியும் கனவால் நீ சத்தியமாய் நம்பினால் - சிலநேரம் கனவுகள்கூட நினைவாகிவிடும்...!