Posts

Showing posts from 2009

முத்தெடுக்கவா...!

உன் பேச்சுக்கள் சிப்பிக்குள் முத்து! மூழ்கி முத்தெடுக்கும் வேலை எனக்கு!

முன்னாடி பின்னாடி!

அடிக்கடி என் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிதான் - என் முன்னாடி இதெல்லாம் - உன்னிடம் காதல் கொண்ட பின்னாடிதான்!

உண்மை காதல்

ஈரிறு கண்கள் ஒரிறு கண்களாய் மாறி இருமனமும் ஒன்றை ஒன்று இடமாறி புரிதலில் முழுமையாய் தேர்ச்சி பெற்று அன்பெனும் வாழ்க்கையை கடைபிடித்து இல்லறம் கொள்வதுதான் உண்மை காதல்!

மனதைவிட்டுபேசு...!

பூக்களெல்லாம் மனதைவிட்டு பேசுது மனதைவிட்டு பேசியதால் காலையிலே மலருது ! பூக்களுக்குள்ள அறிவுகூட மனிதனுக்கில்லயே ! தினம் பூத்துக்குலுங்க வேண்டிய மனிதன் அதை பார்த்தாவது திருந்தட்டுமே !

முழுமையான பெண் நீ!

Image
இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளிவர போகிறது. உங்கள் மனதை ஈர்க்கும், உங்கள் ரசனையில் கலக்கும்....! அதுவரை பொருத்திருங்கள்.