கனவு

தூங்கி எழ நினைத்தாலும் - எனை
தூக்கத்தில் ஆழ்த்தும்
என் கற்பனை திறனை அதிகரிக்கும் - நான்
அறியாமலேயே !
கண்ணை மூட கற்றுகொண்ட நான்
கனவை அடக்க கற்றுகொள்ளவில்லை - அதுவும்
ஒருவிதத்தில் நல்லதுதான் - என்
கற்பனை திறனை வளர்க்கிறதே !
முந்தி அடித்து
முகம் சோர்ந்து
அவசர உலகத்தில்
அலைந்து திரிந்து
வந்து படுத்தால் - உங்கள்
கண்களுக்கு விருந்தாகவும் - உங்கள்
கற்பனைக்கு மருந்தாகவும் - கனவுகள்
தினம் காட்சியளிக்கும்...!
எட்ட முடியா வாழ்க்கையை கூட
தொட்டுவிட முடியும் கனவால்
விட்டுபோன உறவைகூட
ஒட்டி பார்க்க முடியும் கனவால்
நீ சத்தியமாய் நம்பினால் - சிலநேரம்
கனவுகள்கூட நினைவாகிவிடும்...!

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்