பயணம்-சந்தோஷம்

பணிச்சாரலில் நனைகிறேன் - உன்
மெல்லிய விரல்கள் என்னை தழுவுவதாய் நினைக்கிறேன் !
குலிரெடுத்து நடுங்குகிறேன் -நீ
என்னை குளுக்குவதுபோல் உணர்கிறேன்
பச்சைபசுமை எங்கெங்கும் - அதுபோல்
நீ என்னில் இருக்கிறாய் என்றென்றும் !
கொட்டுகின்ற அருவியை பார்த்தால் - உன்னில்
ஊற்றெடுக்கும் அன்பை நான் பார்க்கிறேன் !
நெடுந்தூரம் பயணங்கள் மேற்கொண்டேன் - நீ
என்னில் இருப்பதாய் எண்ணி !
சுற்றி பார்த்த இடமெல்லாம் சந்தோஷம் -ஏனெனில்
அதில் உன் முகம் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் !
கடவுளிடம் வேண்டினேன் - இதை விட
சந்தோஷம் வேறு இல்லை என்று !

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்