அவளிடம்

தென்றல் அவள் பக்கம் சாய்ந்து கேட்கிறது
உன் வெட்கம் கொஞ்சம் கடன் தா என்று !
மின்னல் அவள் மனதை தொட்டு கேட்கிறது
எப்படி மனதை படம்பிடிப்பதென்று !
நிலவு அவள் முகம்பார்த்து கேட்கிறது
எப்படி முழுநிலவாய் முழுநேரம் இருப்பதென்று !
சூரியன் அவள் சுகம் பார்த்து கேட்கிறது
கோபத்திலும் எப்படி அழகாய் தோன்றுவதென்று !
வீசுகின்ற பெருங்காற்று
பாய்ந்து வருகிற அலைகள்
ஓயாமல் பெய்யும் அடை மழை
பொங்கிவரும் தீக்குமிழி
பாரம் தாங்காமல் அதிரும் பூமிதாய்
சுட்டெரிக்கும் வெயில்
மனிதனின் ஆசை -
இவையெல்லாம் அவளிடம் கேட்கிறது
பொறுமையை கடைபிடிப்பது எப்படி என்று !

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!