காதல் கொண்டேன்

காதல் கொண்டேன் பெண்ணே - உன்னை
கண்ட முதல் நாளே !
கண்கள் உனைதேடி அலையும் அதுதானே
கனவுலகின் காதலியே நினைவுலகில் வருவதெப்போ !
பிரியமுடன் வருவாயா பிரிய முத்தம் தருவாயா !
மழை பொழியுது மனம் வீசுது
மலர்களெல்லாம் பூக்கிறது பூக்கிறது
உன் வருகைக்காக காத்து கிடக்கிறது !
தினந்தோறும் மனம் தேடும்
என் காதலி நீ தானே !
என் இதயம் துடிப்பது - உன்
நினைவின் அலைவரிசையிலே...!
உன்னோடு வாழ்ந்து நீ பெற்ற
இன்பம் நான் பெற வேண்டும்
என்னோடு வாழ்ந்து நீ வேண்டிய
வாழ்க்கை நான் தர வேண்டும் !
கண்களுக்குள் நீதானே... கடைசிவரை காப்பேனே...!
கண்மணியே நீ வர காத்திருக்கு மனம் - என்
வாசல் திறந்திருக்கு தினம் !

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்